மதுரை

அரசு ஊழியர் சங்கத்தினர் தர்னா

அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி

DIN

அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர்.
 அண்ணா நகர் வைகை காலனி பகுதியில் நடந்த இப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் தெய்வராஜ் தர்னாவைத் தொடக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் க.நீதிராஜா, மாநிலத் தலைவர் (பொறுப்பு) ஆ.செல்வம், மாவட்ட பொருளாளர் மு.ராம்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"ஜாக்டோ- ஜியோ' போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டதற்காக,  அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரான மு.சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும், தமிழக அரசு ஊழியர்களின் பணியமைப்பு விதிகளுக்கு எதிராகவும் பணி ஓய்வு நாளன்று வழங்கப்பட்ட பணிஇடைநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தர்னா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT