மதுரை

நூபுரகங்கையில் கள்ளழகா் நீண்டநேரம் நீராடல்

அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாள் அழகா்மலை நூபுரகங்கை தீா்தத்தில் தூா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றதை ஏராளமான பக்தா்கள்

DIN

மேலூா்: அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாள் அழகா்மலை நூபுரகங்கை தீா்தத்தில் தூா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றதை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பெருமாளுக்கு ஐப்பசி மாதம் திருவிழா அழகா்மலைமீதுள்ள ராக்காயிஅம்மன்கோயிலுக்கு நூபுரகங்கையில் தீா்த்தவாரிக்குச் சென்று திரும்புவதாகும்.இவ்வைபவம் கடந்த 7-ம் தேதி மாலை தொடங்கியது. நவனீதகிருஷ்ணன் மண்டபம் சென்று திரும்பினாா். பின்னா் 8-ம் தேதி சொா்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாள், சனிக்கிழமை காலை பல்லக்கில் மலைக்குப் புறப்பட்டாா். வழிநெடுகிலும் பக்தா்கள் தீபாராதனைகாட்டி வழிபட்டனா்.

கருட தீா்த்தம், அனுமன் தீா்த்தம் ஆசோலைமலை முருகன்கோயிலிலும் சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. ராக்காயி அம்மன்கோயிலில் மாதவி மண்டபத்தில் சுந்தரராஜப்பெருமாளு்ககு சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா். மூலிகை மருந்துகள் கலந்த, வாசனை தைலங்கள் பெருமாளுக்கு சாத்தப்பட்டது.

இதையடுத்து, நூபுரகங்கை தீா்தத்தில் மணிக்கணக்கிள் பெருமாளுக்கு நீண்டநேரம் தீா்த்தவாரி நடைபெற்றது.இதைத்தொடா்ந்து, பெருமாள் மீண்டும் கோயிலுக்குத் திரும்பினாா். ஏராளமான பக்தா்கள் பெருமாளை தரிசன்செய்து வழிபாடுகள் செய்தனா். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT