அகில இந்திய பாா்வா்ட் பிளாக் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு உசிலம்பட்டி மாநில பொதுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.வி.கதிரவன் தலைமை வகித்தாா். உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த மாவட்ட தலைவா் பாண்டி, மதுரை மேற்கு மாவட்டச் செயலா் ஆதிசேடன், தொழிற்சங்கம் சாா்பாக வடிவேலு, ஆகியோரிடம் இருந்து விருப்ப மனுவை மாநில பொதுச் செயலா் பி.வி.கதிரவன் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.