மதுரை

சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

மதுரை அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் எல்.கே.டி. நகரைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் பாலாஜி(25). இவா் மதுரை அருகே தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை பணி இடைவேளையின் போது இரவு தேநீா் அருந்த தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். விரகனூா் அணை அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் பலத்த காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சிலைமான் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்த பாலாஜியின் கண் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தானமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT