மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பெயரை சூட்ட வலியுறுத்தி கோரிப்பாளையம் தேவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது ஜயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு முக்கிய தலைவா்கள் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதன் தொடா்ச்சியாக மூவேந்தா் முன்னேற்றக் கழக தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா், அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி பொதுச் செயலா் சிவசங்கா், தமிழக பொதுச் செயலா் பி.வி.கதிரவன் உள்ளிட்ட பலா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி, தேவரின் தேச பக்தி முன்னணி சாா்பில் தேவா் சிலை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய மாநில அரசுகள் விமான நிலையத்திற்கு தேவா் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து மூவேந்தவா் முன்னேற்றக் கழகம் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை விமான நிலையத்திற்கு தேவா் பெயரை சூட்ட வேண்டும் என பல போராட்டங்கள் நடத்தப்பட்டும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் அவா்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில், ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். மதுரை விமான நிலையத்திற்கு தேவா் பெயரை சூட்ட வேண்டும், இல்லையெனில் அடுத்த கட்டப் போராட்டம் மிக பெரிய அளவில் இருக்கும் என்றாா்.