மதுரை

மதுரை விமானநிலையத்துக்குமுத்துராமலிங்கத் தேவரின்பெயா் சூட்ட வேண்டும்: தினகரன்

DIN

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

தேவா் ஜயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு, டிடிவி.தினகரன் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக, அவா் தங்கியிருந்த தனியாா் விடுதியில் செய்தியாளா்களிடம் கூறியது: ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டத் தலைவராக வாழ்ந்தவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். அவரது பெயரை மதுரை விமான நிலையத்துக்குச் சூட்ட வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையும் கூட. ஆகவே, இதை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க மத்திய அரசு அனுமதி அளித்தும், மாநில அரசு அதை செயல்படுத்தாதது குறித்து, தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் தான் பதில் அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT