மதுரை

கார் மோதி மாநகராட்சி துப்புரவு ஊழியர் பலி

DIN

மதுரையில் கார் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த துப்புரவு ஊழியர் புதன்கிழமை உயிரிழந்தார்.
மதுரை அண்ணாநகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் தமிழரசன் (43). இவர் மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், புதன்கிழமை மருது பாண்டியர் தெரு உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் முன், தமிழரசன் உள்ளிட்ட பல ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது கார் ஒன்று சாலையோரத்தில் நின்றிருந்த கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் தமிழரசன் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த தழிழரசன், அழகர், சங்கர பாண்டி ஆகியோரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தமிழரசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த அழகர், சங்கர பாண்டி ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார்  வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த மதுரை மேலமடையைச் சேர்ந்த ஜெகநாதனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமா?: கார் ஓட்டி வந்த ஜெகநாதன்(27), பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், தனக்கு புதன்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது, அதற்காக வேகமாக சென்றபோது தான் விபத்து ஏற்பட்டது என போலீஸாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் ஜெகநாதனின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது, மகனுக்கு திருமணமா, எங்களுக்கு தெரியாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. போலீஸார் ஜெகநாதனிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT