மதுரை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது

DIN


மதுரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி செய்தவரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரைச் சேர்ந்தவர் வாவா புகர்தீன் (30). இவர், தமிழ்நாடு செய்தித் தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கு  முயற்சித்துள்ளார். 
இந்நிலையில், வாவா புகர்தீனின் நண்பர் புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த வினோத்ராஜா, அந்த வேலையை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். 
அதையடுத்து, வினோத்ராஜா மற்றும் அவரது தந்தை ஜெயசங்கர்ஆகியோரிடம், வாவா புகர்தீன் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 3 தவணைகளாக ரூ. 20 லட்சம் கொடுத்துள்ளார். 
ஆனால், அவர்கள் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லையாம். 
வாவா புகர்தீன் பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். 
  இது குறித்து வாவா புகர்தீன் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து ஜெயசங்கரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT