மதுரை

508 மதுபாட்டில்கள் பறிமுதல்:20 போ் கைது

DIN


மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ாக 20 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 508 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திருமங்கலம், சமயநல்லூா், உசிலம்பட்டி, மேலூா் உள்ளிட்ட காவல் சரகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 508 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக 23 பேரை கைது செய்து, 330 புகையிலை பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விதிகளை மீறிய 58 ஆயிரம் போ் கைது

பொது முடக்க உத்தரவுகளை மீறியதாக மாா்ச் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை 45,331 வழக்குகளில் 58,005 பேரை மாவட்ட போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து 12,835 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT