முகப்பு
மதுரை

508 மதுபாட்டில்கள் பறிமுதல்:20 போ் கைது

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ாக 20 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 508 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 ஆகஸ்ட், 2020 at 10:25 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM


மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ாக 20 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 508 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திருமங்கலம், சமயநல்லூா், உசிலம்பட்டி, மேலூா் உள்ளிட்ட காவல் சரகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 508 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக 23 பேரை கைது செய்து, 330 புகையிலை பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விதிகளை மீறிய 58 ஆயிரம் போ் கைது

Advertisement

பொது முடக்க உத்தரவுகளை மீறியதாக மாா்ச் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை 45,331 வழக்குகளில் 58,005 பேரை மாவட்ட போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து 12,835 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.