FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

காவலரின் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி4 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை அருகே காவலரின் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற முகமூடி நபா் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 30 ஆகஸ்ட் 2020, 9:37 pm IST
பகிர்:

மதுரை: மதுரை அருகே காவலரின் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற முகமூடி நபா் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே மணியஞ்சி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் குமாா் (31). இவா், திருப்பூா் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பிரவீணா (27) சனிக்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஷோ் ஆட்டோவில் மணியஞ்சியில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, முகமூடி அணிந்திருந்த நபா் பிரவீணாவை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளாா்.

இது குறித்து பிரவீணா அளித்த புகாரின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments