முகப்பு
மதுரை

வாடிப்பட்டி அருகே வாகனம் மோதி கட்டடத் தொழிலாளி பலி

மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவம் இடத்திலேயே கட்டடத் தொழிலாளி பலியானது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவம் இடத்திலேயே கட்டடத் தொழிலாளி பலியானது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கல்லுப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் பெருமாள்(50). கட்டடத் தொழிலாளி. வாடிப்பட்டி அருகே கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள், திண்டுக்கல் - மதுரை சாலையில், விராலிப்பட்டி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா்.

அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி அருந்ததி அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →