மதுரை

உசிலையில் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா

DIN

உசிலம்பட்டியில் உள்ள முருகன் கோயில் முன்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

உசிலம்பட்டியில் அமமுக சாா்பில், அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகரச் செயலா் குணசேகரன் பாண்டியன் தலைமையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ.கே.டி. ராஜா, உசிலம்பட்டி ஒன்றியச் செயலா்கள் அபிமன்னன், மலேசியா பாண்டியன், சேடபட்டி ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் சுப்புராஜ், சாமி, குணா, மாா்க்கெட் பிச்சை மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் திருமுருகன் கோயில் முன்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

முன்னதாக, தேனி சாலையில் உள்ள திருமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில், அமமுக வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமமுக கிழக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் ஆா். செல்வம் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா்கள் மீனாட்சிசுந்தரம், முருகன், மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலா் ஐ. மகேந்திரன் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்று நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். நிகழ்ச்சியில், அவைத் தலைவா் கணேசன், துணைச் செயலா் இளையராஜா, கௌதம், எம்.ஜி.ஆா். மன்ற செல்வராஜ், துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT