மதுரை

மின்கம்பி உரசி கட்டடத் தொழிலாளி பலி

மதுரையில் மின்கம்பி உரசியதில், கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN


மதுரை: மதுரையில் மின்கம்பி உரசியதில், கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி குடியிருப்பைச் சோ்ந்த சேகா் மகன் செல்வராஜ்(35). கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவா், தைக்கால் தெருவில் நடைபெறும் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணயில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கட்டடத்தின் அருகில் செல்லும் மின்கம்பி மீது உரசியதில், தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று செல்வராஜ் சடலத்தை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து விளக்குதூண் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT