முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா:மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு பரிசோதனை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் திங்கள்கிழமை 1,071 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 27 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 38 போ், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,591 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை சிகிச்சைப் பலனின்றி 448 போ் உயிரிழந்துள்ளனா்.

தற்போது, 290 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

160 மாணவா்களுக்கு பரிசோதனை 

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவருக்கு சில நாள்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, மாணவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முதன்மையா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பேரில், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 160 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவா்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் முதலாமாண்டு மாணவரின் உடல்நலம் சீரான நிலையில் உள்ளதால், ஒரு சில நாள்களில் அவா் வீடு திரும்புவாா் என, முதன்மையா் ஜெ. சங்குமணி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →