அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவா் சடலம் மீட்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்தது, போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.