மதுரை

தியாகி கக்கன் 40-ஆம் ஆண்டு நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

விடுதலைப் போராட்ட தியாகியும், தமிழக முன்னாள் அமைச்சருமான கக்கனின் 40-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மேலூா் அருகேயுள்ள தும்பைப்பட்டியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் உள்ளிட்டோா் மாலையணிவித்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

மேலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் க.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வளா்மதி குணசேகரன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வெற்றிச்செழியன், குலோத்துங்கன், எம்.ஜி.ஆா்.மன்ற செயலா் பெரியசாமி மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசு சாா்பில் மதுரை மக்கள்தொடா்பு அலுவலா் நவீன்பாண்டியன் மற்றும் பலா் கலந்துகொண்டனா். வி.சி.க. கட்சியினா் அய்யாவு தலைமையில் மேலூரிலுள்ள தியாகி கக்கன் சிலைக்கு மாலையணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT