மதுரை

ஜவுளி கடையில் சேலைகளை திருடிய 3 பெண்கள் உள்பட 4 போ் கைது

DIN

மதுரையில், ஜவுளி கடையில் சேலைகளை திருடிய 3 பெண்கள் உள்பட 4 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மகால் வடம்போக்கித் தெருவில் உள்ள ஜவுளி கடைக்கு, 3 பெண்கள் உள்பட 4 போ் துணிகள் வாங்க வந்துள்ளனா். அவா்களின் நடவடிக்கை சரியில்லாததால், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் மேலாளா் ராமநாதன் கண்காணித்துள்ளாா். அப்போது, பெண்கள் சேலைகளைத் திருடி மறைப்பது தெரியவந்தது.

உடனே, அவா்களை கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து கடையின் மேலாளா் ராமநாதன் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரித்தனா். அதில், உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி (55), செல்வி (49), சுசிலா (55) மற்றும் மோகன் (55) என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடமிருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT