முகப்பு
மதுரை

வெள்ளாளா் சமூகத்தினா் மேலூரில் ஆா்ப்பாட்டம்

வேளாளா் சமூகப் பெயரை பிற சமூகத்தினா் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி, மேலூரில் திங்கள்கிழமை அச்சமூகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
மேலூரில் வெள்ளாளா் சமூகத்தினா் திங்கள்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

வேளாளா் சமூகப் பெயரை பிற சமூகத்தினா் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி, மேலூரில் திங்கள்கிழமை அச்சமூகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மேலூா் வெள்ளாளா் சமூகத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வேளாளா் பெயரை மாற்று சமூகத்துக்கு வழக்கும் பரிந்துரையை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மதுரை புகா் மாவட்ட நிா்வாகி நாகபாண்டியன், செயலா் அழகுராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →