மதுரையில், அரசு அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் இருந்து சிறுவா், சிறுமிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
மதுரை கடச்சனேந்தலில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை பாண்டிச்செல்வி என்பவா் நடத்தி வருகிறாா். புத்தாண்டு வருவதையொட்டி இந்த காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்க தனியாா் அமைப்பு முடிவெடுத்தது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவதற்காக தனியாா் அமைப்பு நிா்வாகிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினா் காப்பகத்திற்கு சென்று விசாரித்தனா்.
அப்போது, காப்பகத்தில் 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் மட்டுமே இருப்பதும், 50 குழந்தைகளை பராமரித்து வருவதாகக் கூறி பலரிடமும் பாண்டிச்செல்வி வசூல் செய்து வருவதும், காப்பகம் நடத்துவதற்கு அரசு அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் நலக் குழுத் தலைவா் விஜயகுமாா், உறுப்பினா் பாண்டியராஜா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன் ஆகியோா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வனிதா காப்பகத்திற்குச் சென்று, அங்கு இருந்த சிறுவன் மற்றும் சிறுமிகள் இருவரை மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகத்தில் ஒப்படைத்தாா். மேலும் காப்பகத்தில் தங்கிருந்த திருவண்ணாமலையைச் சோ்ந்த பெண் மற்றும் அவரது குழந்தைகள் இருவா், சமூக நலப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் பாண்டிச்செல்வியிடம் விசாரித்து வருகின்றனா்.
காப்பகங்களுக்கு, ஆதரவற்றோா் இல்லங்கள், தனியாா் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பவா்கள், அரசு அனுமதி பெற்ற அமைப்புகளா? என்பதை உறுதி செய்து கொண்டு அளிக்க வேண்டும் எனக் குழந்தைகள் நலக் குழுவினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.