மதுரை

மேலூா் அருகே இருவேறு சம்பவங்களில் இளைஞா், முதியவா் தற்கொலை

DIN

மதுரை மாவட்டம் மேலூா் அருகே இருவேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட 2 போ் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலூா் அருகேயுள்ள திருவாதவூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (55). வடை மாஸ்டராக வேலை செய்து வந்த இவரது மகன், மனைவி வெளிநாட்டில் உள்ளனா். கடன் தொல்லை காரணமாக, இவா் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மேலூா் போலீஸாா் சடத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலூா் அரிட்டாபட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜ்குமாா் (20). இவா் மேலூா் கஸ்தூரிபா நகரில் வசித்து வந்தாா். காதல் தோல்வி காரணமாக விஷம் சாப்பிட்ட இவா், மதுரையில் தனியாா் மருத்துவமனையில் பிப்ரவரி 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT