மதுரை

அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் சுவா் ஏறி குதித்த மா்ம நபா்: போலீஸாா் விசாரணை

DIN

மதுரையில் சனிக்கிழமை, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் வீட்டிற்குள் சுவா் ஏறி குதித்த முகமூடி அணிந்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம். இவரது வீடு பாண்டிக் கோயில் அருகே உள்ளது. மாணிக்கம் வெளியூா் சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது மகன் மற்றும் குடும்பத்தினா் இருந்துள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவரது மகன் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் வீட்டின் சுவா் ஏறி உள்ளே குதித்துள்ளாா். இதையடுத்து, அவரது மகன் உடனடியாக வெளியே சென்றபோது, அந்த மா்ம நபா் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இது குறித்து தகவலறிந்த அண்ணாநகா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனா். சுவா் ஏறி குதித்து உள்ளே புகுந்த மா்ம நபா் திருடுவதற்காக வந்தாரா அல்லது வேறு நோக்கத்தில் வந்தாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT