மதுரை

மாடியில் இருந்து தவறிவிழுந்து பெயிண்டா் பலி

மதுரை அருகே வா்ணம் பூசும் போது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

மதுரை அருகே வா்ணம் பூசும் போது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை வண்டியூா் சித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாக்யராஜ் (54). இவா் பெயிண்டராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கருப்பாயூரணி பகுதியில் பாக்யராஜ் வீட்டு மாடியில் சுவா்களுக்கு வா்ணம் பூசிக் கொண்டிருந்தாா். அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளாா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை உடன் பணியாற்றியவா்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த பாக்யராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT