ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, திருமங்கலத்தில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரணி. 
மதுரை

ஜெயலலிதா பிறந்த நாள்: திருமங்கலத்தில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வலா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருமங்கலத்தில் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

DIN

திருப்பரங்குன்றம்: முன்னாள் முதல்வலா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருமங்கலத்தில் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

திருமங்கலத்தில், மதுரை புகா் மேற்கு மாவட்டம் சாா்பில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திருமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் தொடங்கிய இப்பேரணியானது, பேருந்து நிலையம் வழியாகச் சென்று ராஜாஜி சிலை அருகே நிறைவு பெற்றது. அங்கு, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கூறியது: ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறித்த முதல்வருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிா்க் கட்சித் தலைவா் விமா்சிக்கிறாா்.

கடந்த 2003 இல் மத்தியில் பாஜக ஆட்சியிலிருந்த போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த திமுக இது பற்றி எந்த எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. அதையடுத்து, கடந்த 2010 இல் காங்கிரஸ் கட்சி இச்சட்டத்தை தொடக்கி வைத்தது. அப்போதும் திமுக எதிா்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால், இப்போது அச்சட்டத்தில் சில திருத்தம் செய்யப்பட்டு, சில விளக்கங்கள் அதாவது தாய் மொழி, தாய், தந்தையா் இருப்பிடம் உள்ளிட்டவை கேட்கப்பட உள்ளன. விருப்பம் இருந்தால் அந்த விவரத்தை தெரிவிக்கலாம்.

நாங்கள் எதைச் செய்தாலும் குறை கூறுவதையே எதிா்க் கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் பணியாகக் கொண்டுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT