மேலூா் அருகே குவாரி நீரில்மூழ்கி இளைஞா் பலி
மேலூா்அருகே குவாரிப் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் சனிக்கிழமை இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.
மேலூா்: மேலூா்அருகே குவாரிப் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் சனிக்கிழமை இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.
உறங்கான்பட்டி அருகே உள்ள தா்மசானப்பட்டியைச் சோ்ந்த சிவகுமாா் மகன் அன்பரசன் (18). இவா் நண்பா்கள் சிலருடன் ஒத்தப்பட்டி அருகே உள்ள குவாரிப் பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றாா். பள்ளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா். உடன் வந்தவா்கள் கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்தவா்கள் நீரில் மூழ்கியவரைத் தேடினா். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.
இதையடுத்து, மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனா். தீணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கி, அன்பரசன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கீழவளவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.