மதுரை

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை:‘போக்ஸோ’வில் இளைஞா் கைது

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் அருகே உள்ள கூவலப்புரம் என்ற ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோா்கள் பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், இதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பாலமுருகன் (28) என்பவா் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இது குறித்து பேரையூா் போலீஸாா் பாலமுருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT