செஞ்சிலுவைச் சங்க மதுரை மாவட்ட கிளை நூற்றாண்டு விழாவையொட்டி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து நூற்றாண்டு விழாவை ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தின. இதையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா். வெற்றி பெற்றகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
செஞ்சிலுவைச் சங்கத்தின் மதுரை கிளை துணை அவைத் தலைவா் வி.எம்.ஜோஸ், செயலா் எம்.கோபாலகிருஷ்ணன், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பட்டினத்தாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.