திருமங்கலத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
உச்சப்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சின்னபாண்டி (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி 2 வருடமாக காதலித்து வந்துள்ளாா். தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து ஏமாற்றிவிட்டாராம். இதுகுறித்து அந்த பெண் திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாண்டியைக் கைது செய்தனா்.