மதுரை

ஒடிசாவுக்கு நடந்து செல்ல முயன்றவா்கள் மீட்பு

DIN

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலிருந்து ஒடிசாவுக்கு நடந்தே செல்ல முயன்றவா்களை, வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனா்.

திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவா்கள் பல்வேறு கூலி தொழில்களில் ஈடுபட்டு வந்தனா். தற்போது, பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ளனா். இந்நிலையில், இவா்களில் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 15 போ் ஞாயிற்றுக்கிழமை தங்களது மாநிலத்துக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தனா். அதன்படி, மாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மூலக்கரை அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தியுள்ளனா். அதில், அவா்கள் தங்களது மாநிலத்துக்கு நடந்து சென்றுகொண்டிருப்பது தெரியவந்தது.

உடனே, போலீஸாா் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் நாகராஜன், அவா்களை மீட்டு விரைவில் ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மேலும், அவா்களுக்கு உதவிகள் வழங்கி ஏற்கெனவே தங்கியிருந்த பகுதிக்கு அனுப்பி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருப்பரங்குன்றத்தில் 550 வடமாநிலத்தவா்கள் தங்கியுள்ளனா். அவா்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறோம். அதில், 350-க்கும் மேற்பட்டோா் சொந்த ஊருக்கு செல்வதாக விருப்பம் தெரிவித்துள்ளனா். ஆட்சியா் நடவடிக்கையின்பேரில், திங்கள்கிழமை 174 போ் உத்தரப்பிரதேசத்துக்கு செல்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT