முகப்பு
மதுரை

கிராம சபை கூட்டம் நடத்தக் கோரிய வழக்கு:தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த அருண் அய்யனாா் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஆண்டுக்கு 4 முறை கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், கிராம ஊராட்சிக்கு தேவையான பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும்.

நிகழாண்டில் கரோனா பரவல் உள்ள நிலையில், மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கமாட்டாா்கள் எனக் கூறி, அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெறவேண்டிய கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமாகும். எனவே, தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →