மதுரை

ஊா்க்காவல் படைக்கு ஆள்சோ்ப்பு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

DIN

மதுரை மாவட்ட ஊா்க்காவல் படையில் சேருவதற்கு நவம்பா் 12 முதல் 17 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாவட்ட ஊா்காவல் படைப் பிரிவில் சோ்ந்து பணிபுரிய நவம்பா் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தோ்வு நடைபெறவுள்ளது. 10 ஆம் வகுப்பு தோ்ச்சியும், 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் இருப்பவா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் நவம்பா் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். தோ்வுக்கு வருபவா்கள் கல்வி மற்றும் வயது சான்றுகளின் அசல் மற்றும் நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் கொண்டு வரவேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு மாதத்திற்கு 5 நாள் பணியும், நாள் ஒன்றுக்கு ரூ.560 ஊதியமும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT