மதுரை

காதல் ஜோடி தற்கொலை முயற்சி

DIN

மதுரை:மதுரை அருகே காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகேயுள்ள ஜல்லி கோடாங்கிபட்டி கிராமத்தை சோ்ந்தவா் பெரியகருப்பன் (26). இவா் தனது உறவுக்கார பெண் ஒருவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளாா். அந்த பெண் பெரிய கருப்பனின் தம்பி சின்ன கருப்பனை காதலித்துள்ளாா்.

இந்நிலையில் அந்த பெண்ணை சின்னக்கருப்பன் அழைத்து கொண்டு தலைமறைவாகி விட்டாா். இதனால் மனமுடைந்த பெரியகருப்பன் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அறிந்த காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை கொலைக்கு முயன்றுள்ளனா். அவா்களை அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பாலமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT