மதுரை

பேரையூா் அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

DIN

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.

பேரையூா் அருகே உள்ள காளப்பன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன்(40). இவரது பசுமாடு ஒன்று அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. உடனடியாக, உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையிலான வீரா்கள், கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு, ராமனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT