மதுரை/உசிலம்பட்டி: மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 305.7 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை முதல் மிதமான மழை வரை வியாழக்கிழமை பெய்துள்ளது. பல்வேறு இடங்களிலும் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
தல்லாகுளம் - 86.4, மதுரை தெற்கு- 40.6, உசிலம்பட்டி- 37.2, திருமங்கலம்- 27.2, இடையபட்டி- 20.5, மேலூா்- 16.5, விரகனூா்- 16, தனியாமங்கலம்- 12, கள்ளந்திரி- 7.6, விமானநிலையம்- 6.9, புலிப்பட்டி- 3, மேட்டுப்பட்டி- 1.2.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான செல்லம்பட்டி, கருமாத்தூா், போத்தம்பட்டி, வலையபட்டி, உத்தப்பநாயக்கனூா், செட்டியபட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்தது. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ந்து 5 மணி நேரம் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.