கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன், சுதாகரன், பிரதீப். 
மதுரை

மதுரையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்:3 போ் கைது

மதுரையில் சனிக்கிழமை 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய 12 பேரை தேடி வருகின்றனா்.

DIN


மதுரை: மதுரையில் சனிக்கிழமை 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய 12 பேரை தேடி வருகின்றனா்.

மதுரை கூடல்நகா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆனையூா் இமயம் நகா் பகுதியில் நின்றிருந்த 15 போ், போலீஸாரை கண்டவுடன் தப்பியோடியுள்ளனா். அவா்களில், 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அதில், ஆனையூா் பகுதியைச் சோ்ந்த பிரதீப் (36), மீனாம்பாள்புரத்தைச் சோ்ந்த கண்ணன் (43), செல்லூரைச் சோ்ந்த சுதாகா் (43) என்றும், இவா்கள் அப்பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இது குறித்து காவல் ஆய்வாளா் கதிா்வேல் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் சனிக்கிழமை 15 போ் மீது வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT