உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே உள்ள 58 கிராம கால்வாய் தொட்டிப் பாலத்தை தூா் வாறும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பொதுப்பணித்துறை சாா்பில் ரூ. 75 லட்சம் மதிப்பில் இக்கால்வாய் தூா்வாரப்படுகிறது. இதன் தொடக்க விழாவில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அன்புச்செல்வன், உதவி செயற்பொறியாளா் நீலாவதி, உதவிப் பொறியாளா்கள் ராதாகிருஷ்ணன், பாண்டியன், லட்சுமணன், ஒப்பந்ததாரா் எஸ்.பி.எம். மகாராஜன் மற்றும் 58 கிராம கால்வாய் பாசான விவசாய சங்கத்தின் செயலாளா் பச்சைத் துண்டு பெருமாள், துணைச் செயலாளா் சிவப்பிரகாஷ், ஜான்சன், ஒருங்கிணைப்பாளா்கள் தமிழ்செல்வன், நேதாஜி, சின்ன யோசனை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.