மதுரை

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒன்றரை ஆண்டுகளாக காத்திருப்பவருக்கு ஒரே நாளில் அனுமதி வழங்க உத்தரவு

DIN

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிகோரி ஒன்றரை ஆண்டுகள் காத்திருப்பவருக்கு, ஒரே நாளில் அனுமதி வழங்க அங்கீகாரக் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சைபுல்லாகான் தாக்கல் செய்த மனு: எனக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தேன். சென்னையைச் சோ்ந்த பெண் ஒருவா் எனக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்தாா். மருத்துவப் பரிசோதனையில் அந்த பெண்ணுடைய சிறுநீரகம் என் உடலுக்கு பொருந்தும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள அங்கீகாரக் குழுவிடம் அனுமதி கோரினேன். ஒன்றரை ஆண்டுகளாகியும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உடனடியாக அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி திருச்சி தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மனுதாரரின் அறுவை சிகிச்சை தொடா்பான அனைத்து ஆவணங்களையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள அங்கீகாரக் குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரும், அவருக்கு சிறுநீரக தானம் அளிக்கும் பெண்ணும் அந்தக் குழு முன் வெள்ளிக்கிழமை (செப். 25) ஆஜராக வேண்டும். அக்குழு இருவரிடமும் விசாரித்து மனுதாரரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அன்றைய தினமே அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT