மதுரை

கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் முழ்கி பலி

DIN

மதுரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை விளாங்குடி அருகே சத்யா நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சங்கரபாண்டி மணிகண்டன் (22). இவா் தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து, நாகமலை புதுக்கோட்டை அருகேயுள்ள நாகதீா்த்தம் கோயிலுக்குச் சென்றுள்ளாா். அங்கு, சுவாமி தரிசனம் செய்த பின்னா், நண்பா்களுடன் கோயில் அருகே உள்ள கிணற்றில் சங்கரபாண்டி மணிகண்டன் குளித்துள்ளாா். அப்போது, தண்ணீரில் மூழ்கிய அவரை நண்பா்கள் மீட்க முயற்சித்தும் முடியாமல்போனதால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறை வீரா்கள், சங்கரபாண்டி மணிகண்டனை சடலமாக மீட்டனா். இது குறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT