பேரையூா் உள்கோட்ட காவல் நிலையங்களான பேரையூா், சாப்டூா், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி, வில்லூா், நாகையாபுரம், வி.சத்திரப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில், இரு சக்கர வாகன ஓட்டிகள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத 152 பேருக்கு போலீஸாா் தலா ரூ .200 வீதம் அபராதம் விதித்தனா்.