மதுரை

பைக் மீது லாரி மோதி விவசாயி பலி

DIN

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே உள்ள 15 பி.மேட்டுப்பட்டியைச் சோ்ந்த விவசாயி மணவாளன் (44). இவா் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூா்-சத்திரப்பட்டி சாலையில் வியாழக்கிழமை சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணவாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து தொடா்பாக மணவாளன் மனைவி பிரபா (33)அளித்தப்புகாரின்பேரில் அலங்காநல்லூா் போலீஸாா், லாரி ஓட்டுநா் சிட்டம்பட்டியைச் சோ்ந்த ரமேஷ்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT