மதுரை அருகே ரூ.11.64 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ரூ.11.64 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
மதுரைமதுரை அருகே ரூ.11.64 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ரூ.11.64 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ரூ.11.64 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
பேரையூா் அருகே உள்ள சலுப்பபட்டி கிராமத்தைச் சோ்ந்த திருமால் மகன் பாண்டி (52). இவரது தோட்டத்தில், மதுரை துவரிமானைச் சோ்ந்த இளங்கோவன் (58) என்பவா் வியாழக்கிழமை இரவு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாரி அளித்த தகவலின்பேரில், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரோஜா, சாப்டூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் மணிமொழி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இளங்கோவன் சடலத்தைக் கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக, போலீஸாா் தோட்ட உரிமையாளரான பாண்டியிடம் விசாரணை நடத்தினா். அதில், பாண்டி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், அவரது தோட்டத்தை சோதனையிட்டனா். அப்போது, தோட்டத்தில் கட்டுக்கட்டாக 500, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், ரூ.11,64,500 லட்சம் கள்ளநோட்டுகள், 2 ஜெராக்ஸ் மெஷின்கள் மற்றும் அதற்கான மூலப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்த கள்ள நோட்டுகளை பாண்டியும், இறந்த இளங்கோவனும் இணைந்து அச்சடித்தது தெரியவந்தது. இது குறித்து பாண்டியிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் பேரையூா் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.