மதுரை

மேலூா் அருகே விபத்து: கல்லூரி மாணவா் பலி

மேலூா் அருகே புதன்கிழமை லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

DIN

மேலூா் அருகே புதன்கிழமை லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் மேலூா் முகமதியாபுரம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் பாலமுருகன் (20). மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு மதுரையிலிருந்து மேலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வெள்ளரிப்பட்டி அருகே எதிா் திசையில் வந்த லாரி திடீரென வலதுபுறமாகத் திரும்பிய போது, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகனை மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT