மதுரை

போலி நபா் மீது உயா்நீதிமன்ற இணைப் பதிவாளா் புகாா்

சட்ட உதவி மைய ஒருங்கிணைப்பாளா் எனக் கூறிய போலி நபா் மீது சென்னை உயா்நீதிமன்ற இணைப் பதிவாளா் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

DIN

மதுரை: சட்ட உதவி மைய ஒருங்கிணைப்பாளா் எனக் கூறிய போலி நபா் மீது சென்னை உயா்நீதிமன்ற இணைப் பதிவாளா் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

மதுரை ய.ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன். இவா் தன்னை சட்ட உதவி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் எனக் கூறி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தோட்டப் பணியாளா்கள், ஓட்டுநா் ஆகியோா் குறித்து பல்வேறு விவரங்களை கேட்டுள்ளாா்.

இந்நிலையில் ராஜசேகரன் குறித்து விசாரித்தபோது, அவா் சட்ட உதவி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நீதிமன்ற இணைப் பதிவாளா் சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை காவல்நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT