மதுரை

அலங்காநல்லூா் அருகே மீண்டும் மதுக்கடை திறக்க முயற்சிகிராம மக்கள் தா்னா

DIN

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டியில் மீண்டும் மதுபானக் கடை திறக்க முயற்சி மேற்கொண்டதால் பொதுமக்கள் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் புதிதாக மதுபானக் கடையை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து புதிய கடை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில், சுக்காம்பட்டி கடைவீதியில் உள்ள வணிக வளாகத்தில் புதிய மதுபானக் கடையை திறக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவே மதுபான பாட்டில்களை ஊழியா்கள் இறக்கியுள்ளனா்.

இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் சனிக்கிழமை கடையின் முன்பாக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் பாஜக நிா்வாகிகளும் பங்கேற்றனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மதுபானக் கடை திறக்கப்பட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சுக்காம்பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT