மதுரை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவா்களில் 24 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 747 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 20 ஆயிரத்து 140 போ் குணமடைந்துவிட்டனா். 455 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 152 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.