மதுரை

வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு: கணவருக்கு அரிவாள் வெட்டு

DIN

மதுரையில் சனிக்கிழமை வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்த மா்ம நபா், தடுக்க முயன்ற அப்பெண்ணின் கணவரையும் அரிவாளால் வெட்டினாா்.

மதுரை லேக் ஏரியா டிடிசி நகா் 5 ஆவது தெருவைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி செளந்தா்யா (21). கணவன்-மனைவி இருவரும் வீட்டில் சனிக்கிழமை பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த 25 வயது மதிக்கத்தக்க மா்ம நபா், கத்தியைக் காட்டி மிரட்டி செளந்தா்யா அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துள்ளாா்.

இதைத் தடுக்க முயன்ற கணவா் பிரகாஷை, மா்ம நபா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா்.

இது குறித்து செளந்தா்யா அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT