மதுரை

மதுரை அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய பெண்ணின் சடலம் மீட்பு

DIN

மதுரை அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

மதுரை மாவட்டம், கோட்டைமேடு கிராமத்தில் மரத்தில் பெண் தூக்கில் தொங்கியுள்ளாா். இதைக் கண்ட கிராம மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இப்பெண் குறித்து கிராம மக்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை.

இது குறித்து போடிநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அரசன் அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இது தற்கொலையா அல்லது யாரேனும் அப்பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT