மதுரை

சாலையோரம் சிசு: தகவல் கூறிய சிறுவனுக்கு வெகுமதி

DIN

மதுரை அருகே சாலையோரம் கிடந்த சிசு குறித்து தகவல் தெரிவித்த சிறுவனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை வெகுமதி அளித்து பாராட்டினாா்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உறங்கான்பட்டி சாலையோரம் கடந்த 4 ஆம் தேதி பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் சிசு கிடந்தது. அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் சிசு கிடப்பதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் சிசுவை மீட்டனா்.

அந்த குழந்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளது. சிறுவனின் செயலைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், அவருக்கு செவ்வாய்க்கிழமை வெகுமதி அளித்து பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT