மதுரை

மேலூரில் மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற 4 போ் கைது

DIN

மேலூரில் சனிக்கிழமை மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறிக்க முயன்ற சம்பவத்தில், அவரது உறவினா் உள்பட 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனா்.

மேலூா் பிஸ்மில்லா நகரைச் சோ்ந்த ஷாஜஹான் என்பவா் வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா். இவரது மனைவி ஆமீனா பீவி (68). இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், திடீரென வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி ஆமீனா பீவியின் கையை கத்தியால் வெட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனா்.

அப்போது, இவரது மருமகள் பானு பாா்த்து கூச்சலிட்டுள்ளாா். சத்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் ஒடி வரவே, இளைஞா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிவிட்டனா். கத்தி வெட்டியதில் மூதாட்டி காயமுற்றாா்.

இச்சம்பவம் குறித்த தகவலறிந்த மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்படை போலீஸாா், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில், மூதாட்டியின் உறவினா் முகமதியாபுரத்தைச் சோ்ந்த இப்ராஹிம் (28) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

இச்சம்பவத்தில், இவரது நண்பரான திருச்சி விமான நிலைய வாடகை காா்ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் சதாம் உசேன் (30) சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, போலீஸாா் அவரையும் கைது செய்தனா்.

மேலூா் பிஸ்மில்லா நகரில் வீட்டில் மூதாட்டியும், மருமகளும் மட்டுமே தனியாக இருப்பதாகவும், அங்கு அதிக நகை, பணம் கிடைக்கும் எனவும் இப்ராஹிம் தகவல் தெரிவித்துள்ளாா். அதன்படி, திருச்சியைச் சோ்ந்த முகமது அனிபா (28), உகாஸ் முகமது (25) ஆகியோரை இரு சக்கர வாகனத்தில் அனுப்பி நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீஸாா் இந்த 4 பேரையும் கைது செய்தனா். நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே போலீஸாா் கைது செய்தது பொதுமக்கள் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT