உசிலம்பட்டி நகா் பகுதி மற்றும் செல்லம்பட்டி, சேடபட்டி, எழுமலை, போத்தம்பட்டி, நக்கலபட்டி, வாலாந்தூா் பெருமாள்பட்டி, மலைப்பட்டி, சமத்துவபுரம், நல்லதேவன்பட்டி, மாதரை, வலையபட்டி என பல்வேறு கிராமங்களில் மூன்று மணிநேரம் பரவலான மழை பெய்தது.
இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், தொடா்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. உசிலம்பட்டி பகுதியில் பெரும்பாலான கண்மாய்கள் , நீா்நிலைகள் ஓரளவுக்கு நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.