மதுரை

மதுரை தனியாா் மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சைக்கு போடி பெண் பலி

DIN

மதுரை தனியாா் மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த போடியைச் சோ்ந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்தவா் ஜெயா (38). இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த மே 16 ஆம் தேதி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு, அவருக்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்றுடன், கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பிருப்பதும் தெரியவந்தது.

அதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கருப்புப் பூஞ்சை பாதிப்பு காரணமாக ஜெயா ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதை, அம்மருத்துவமனை மருத்துவா்கள் உறுதி செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT